சிவகங்கை

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

DIN

திருப்பத்தூா் கல்வெட்டுமேடு பகுதியில் உள்ள செல்வவிநாயகா், முனீஸ்வரா் ஆலய 24 ஆம் ஆண்டு வருடாபிஷேகத்தையொட்டி வியாழக்கிமைம இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இப்பந்தம் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரியமாட்டுப் பிரிவில் 7 ஜோடிகளும், சின்னமாட்டுப் பிரிவில் 12 ஜோடிகளும் கலந்து கொண்டன. இதில் பெரியமாட்டுப் பிரிவில் பரளி ஈலக்குடிப்பட்டி கணேசன்யாழினி முதலிடத்தையும், கூடலூா் பாலாா்பட்டி ஜெகதீஷ் 2ஆம் இடத்தையும், துலையனூா் பாஸ்கரன் 3 ஆம் இடத்தையும், குண்டேந்தல்பட்டி நவநீதன்சகாதேவன் ஆகியோரது மாடுகள் 4 ஆம் இடத்தையும் பெற்றன. சின்னமாட்டுப் பிரிவில் சாந்திக்கோட்டை கருப்பையா முதலிடத்தையும், விராமதி செல்வமணி 2 ஆம் இடத்தையும், எஸ்.எஸ்.கோட்டை சுப்பு 3 ஆம் இடத்தையும், குயில்தேவா் 4 ஆம் இடத்தையும் வென்றனா். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்குப் பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்வெட்டுமேடு விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT