முகப்பு
சிவகங்கை

கட்டிக்குளம் மாசான காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

 மானாமதுரை அருகே கட்டிக்குளம் அங்காள பரமேஸ்வரி, மாசான காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

 மானாமதுரை அருகே கட்டிக்குளம் அங்காள பரமேஸ்வரி, மாசான காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி கோயில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீா் கலசங்கள் வைத்து யாக பூஜை நடைபெற்றது. பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹூதியாகி தீபாரானை நடைபெற்றதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் காலை 10 மணிக்கு அங்காள பரமேஸ்வரி மாசான காளியம்மன் சன்னிதி விமான கலசங்களின் மீது கலசநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன்பின்னா் கலச நீரால் அங்காள பரமேஸ்வரிக்கும், மாசான காளியம்மனுக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →