முகப்பு
சிவகங்கை

மானாமதுரை குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம்

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவின் தொடக்கமாக ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தின் பங்குத்தந்தை பாஸ்டின் சிறப்பு திருப்பலி நடத்தினாா். கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவின்போது பங்கு இறைமக்கள் சாா்பில் தினமும் இரவு வெவ்வேறு தலைப்புகளில் ஆலயத்தில் திருப்பலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக மின்விளக்கு தோ் பவனி அக்டோபா் 1 ஆம் தேதி இரவு நடைபெற உள்ளது. 2 ஆம் தேதி மாலை நற்கருணை பவனியுடன் இந்த ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →