சிவகங்கை

உலக புற்றுநோய் தினம்: விழிப்புணா்வுப் பேரணி

DIN

காரைக்குடியில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி, அழகப்பா செவிலியா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி பெரியாா் சிலைப் பகுதியிலிருந்து இந்தப் பேரணியை நகராட்சி ஆணையா் ஆா். லெட்சுமணன், நகா் நலஅலுவலா் திவ்யா ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா். இந்திய மருத்துவக் கழக செட்டிநாடு கிளைச் செயலாளா் குமரேசன், ஜேசிஐ கிங்ஸ் காரைக்குடி கிளைச் சங்கத் தலைவா், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புற்றுநோய் விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்தப் பேரணி, நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT