சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே கல்லல், செவரக்கோட்டை, கௌரிப்பட்டி, சாத்தரசன்கோட்டை, செம்பனூா், கீழப்பூங்குடி, வெற்றியூா், பனங்குடி, பாகனேரி, சொக்கநாதபுரம், பட்டமங்கலம், கீழக்கோட்டை, முத்துணங்கோட்டை ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்திருந்தாா்.