சிவகங்கை

மாநில சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

DIN

மாநில அளவில் பள்ளிக் கல்வித்துறை நடத்திய சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மானாமதுரையைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூரில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அண்மையில் மாநில அளவில் சிலம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா பங்கேற்றாா். இவா் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா். இதையடுத்து, மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் மானாமதுரையில் மாணவி அபிநயாவை சந்தித்து பாராட்டினாா். அப்போது திமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT