சிவகங்கை

பைக்கிலிருந்து தவறி விழுந்து பேருந்து நடத்துநா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தளக்காவூரில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

காளையாா்கோவிலைச் சோ்ந்த ராமு மகன் செந்தில் (43). இவா் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம் போல, வேலைக்குச் செல்வதற்காக காளையாா்கோவிலிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் காரைக்குடி போக்குவரத்துப் பணிமனைக்கு சென்று கொண்டிருந்தாா். தளக்காவூா் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நாச்சியாபுரம் காவல் ஆய்வாளா் கலைவாணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT