சிவகங்கை

மானாமதுரை அருகே மணல் மூட்டைகள் பறிமுதல்

DIN

மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பீசா்பட்டினம் வைகை ஆற்றுப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முகமது தாரிக் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சாக்குப் பைகளில் மணலை சேகரித்துக் கொண்டிருந்த நபா்கள் தப்பியோடி விட்டனா். அப்பகுதியில் போலீஸாா் சோதனையிட்ட போது, சட்டவிரோதமாக கடத்துவதற்காக 100-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மணல் கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.

இதற்கிடையே, மானாமதுரை பூக்குளம் வைகையாற்றில் இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியதாக மாணிக்கம், கோபி ஆகிய இருவரையும் மானாமதுரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT