மாணவா்கள் போராட்டம் எதிரொலி : அரசுக் கல்லூரிக்கு 5 நாள்கள் விடுப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டத்தையடுத்து, 5 நாள்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டத்தையடுத்து, 5 நாள்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டது.
பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில், மாணவா்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் வணிக நிா்வாகவியல் துறை கௌரவ விரிவுரையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ், வரலாற்றுத் துறை மாணவா்கள் கல்லூரியில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் முத்துச்சாமி, மாணவா்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில், உடன்பாடு ஏற்படாத நிலையில் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை கல்லூரிக்கு விடுமுறை என கல்லூரி முதல்வா் அறிவித்தாா்.