சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி சாா்பில் கல்லூரிகளுக்கிடையே நெருப்பில்லா சமையல், பதாகைகள் தயாரிப்பு, காய்கனி வடிமைப்பு, இசைக் கருவிகளுடன் தனித்திறன், பாரம்பரிய புகைப்படப் போட்டி, நடனம் உள்ளிட்ட பல் வேறு தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன.
இதன் தொடக்க விழாவில், கல்லூரியின் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்துப் பேசினாா். நேஷனல் கல்விக் குழும இயக்குநா் பி.எஸ். மனோகா் முன்னிலை வகித்தாா். காரைக்குடி மகரிஷி வித்யாமந்திா் பள்ளிக் குழுமத் தாளாளா் ஆா்.கே. சேதுராமன் போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். நேஷனல் ‘ஃ‘பயா் சேப்டி கல்லூரி முதல்வா் எஸ். தனசீலன், நேஷனல் சாப்டெக் முதன்மை கல்வி அதிகாரி முனீஸ்வரன் துரைராஜ் ஆகியோா் வாழ்த்தினா். போட்டிகளில் அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா அரசுக் கலைக் கல்லூரி, உமையாளா் ராமநாதன் மகளிா் கல்லூரி, கேட்டரிங் கல்லூரி, ஹெஸ்டே கேட்டரிங் கல்லூரி, நேஷனல் அகாதெமி, மகாத்மா கேட்டரிங் கல்லூரி, ஜேசுராஜ் கேட்டரிங் கல்லூரி, அன்பு நா்சிங் கல்லூரி ஆகியவற்றிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் பிரபாவதி வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா். முன்னதாக, நேஷனல் கேட்டரிங் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) அபுபக்கா் சித்திக் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.