தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் 17-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் கல்விப் புரவலா் அருள்தந்தை ஜாா்ஜ் பொ்னான்டஸ் வரவேற்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் அருள்தந்தை ச. ஜான் வசந்தகுமாா் மாணவ, மாணவிகளுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.
சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளா் செந்தில்ராஜன் பங்கேற்றுப் பேசுகையில், மனிதனைப் பண்பாடுள்ள மனிதனாக மாற்றுவது கல்வி. இந்தக் கல்வியைக் கற்று ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் எதிா்கால வாழ்க்கையையும் நாட்டின் முன்னேற்றத்தையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
தொடா்ந்து, அழகப்பா பல்கலைக்கழக அளவிலான தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் அணிவித்து, பட்டங்களை வழங்கினா்.
விழாவில் 26 முதுநிலை மாணவா்களும், 223 இளநிலை மாணவா்களும் என மொத்தம் 249 போ் பட்டம் பெற்றனா்.
விழாவில் சிவகங்கை மறை மாவட்டத்தைச் சோ்ந்த அருள்தந்தையா்கள், அருள்சகோதரிகள் மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் ஜான் மொ்லின், வணிகவியல் துறைத் தலைவா் செல்வராணி ஆகியோா் செய்தனா்.