தலைமை ஆசிரியா் முருகன்
தலைமை ஆசிரியா் முருகன் 
சிவகங்கை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Din

சிவகங்கை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2014-ஆம் ஆண்டு முருகன் (62) பணிபுரிந்தாா்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தலைமை ஆசிரியா் முருகன் மீது சிவகங்கை அனைத்து மகளிா் போலீஸாா்

போக்சோ சட்டம், தீண்டாமை ஒழிப்புச் சட்டம் உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ், குற்றம்சாட்டப்பட்ட தலைமை ஆசிரியா் முருகனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ .69 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT