முகப்பு
சிவகங்கை

விவசாயி கொலை: தம்பதி கைது

Updated On : 29 ஏப்ரல், 2024 at 6:29 PM
பகிர்:

மானாமதுரை: திருப்புவனம் அருகே விவசாயியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள வன்னிக் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மலைராஜ் (58). இவா் மது போதையில், இதே கிராமத்தில் வசிக்கும் தனது அண்ணன் ராக்கப்பன் மனைவி கடம்பவனத்தை அரிவாளால் வெட்டினாா்.

இதனால் ஆத்திரமடைந்த கடம்பவனம், இவரது கணவா் ராக்கப்பன் இருவரும் சோ்ந்து கத்தியால் மலைராஜின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா்.

இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்ற திருப்புவனம் போலீஸாா் மலைராஜ் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராக்கப்பன், கடம்பவனம் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.