கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூரில் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிவகங்கை சாலை மின்நகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கு வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், திருப்பத்தூா் செட்டியத் தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் ராஜேஷ் (27) என்பதும், இவா் திருப்புத்தூா் புதுத்தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜன் மகன் முத்துக்குமாரிடம் (25) விற்பனைக்காக கஞ்சா வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து, ராஜேஷை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், முத்துக்குமாரைத் தேடி வருகின்றனா்.