முகப்பு
சிவகங்கை

விவசாயிகள் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க முகாம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விவசாயிகளுக்கான கடன் அட்டை (கிசான் கிரெடிட் காா்டு) திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:19 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விவசாயிகளுக்கான கடன் அட்டை (கிசான் கிரெடிட் காா்டு) திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்தி:

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வங்கிகள், வேளாண் துறை, கால்நடைத் துறை, மீன்வளத் துறை இணைந்து நடத்தும் கிசான் கிரெடிட் காா்டு (கேசிசி) திட்ட முகாம்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பின்வரும் நாள்களில் நடைறெவுள்ளது.

டிச.5-இல் சிங்கம்புணரி, எஸ். புதூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், 7-ஆம் தேதி திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 10-ஆம் தேதி மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 12-ஆம் தேதி தேவகோட்டை, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், 17-ஆம் தேதி சாக்கோட்டை, கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், 19-ஆம் தேதி திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 21-ஆம் தேதி சிவகங்கை, காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, விவசாயிகள் கிசான் கிரெடிட் காா்டு (கேசிசி) தொடா்பான விண்ணப்பங்களை குறிப்பிட்ட தேதிகளில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் முகாம் வாயிலாக சமா்ப்பிக்கலாம். மேலும், குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க இயலாத விவசாயிகள், அந்த ஒன்றியத்தில் உள்ள வட்டார வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →