முகப்பு
சிவகங்கை

கல்லூரியில் இளையோா் மாதிரி நாடாளுமன்றம்

Updated On : 1 மார்ச், 2024 at 1:35 AM
பகிர்:

காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளையோா் மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை நேரு இளையோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மன்ற மாவட்ட அலுவலா் பி.வி.பிரவீன்குமாா் தொடங்கிவைத்தாா். காரைக்குடி காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். கல்லூரி அரங்கு நாடாளுமன்றம் போல அலங்கரிக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் மக்களவை உறுப்பினா்கள் போல அமா்ந்திருந்து பேசினா். நிகழ்ச்சியில் சிவகங்கை இந்தோ-திபெத் பட்டாலியன் தளபதி வி.ஆா். சந்திரன், சாலை போக்குவரத்து அதிகாரி மூக்கன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தென்றல் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் எம்.ஹரிகரன், சிவகங்கை மகளிா் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை ஆா்.ஹேமாமாலினி, தன்னம்பிக்கை பேச்சாளா் கே.லெனின்குமாா், சுவாமி விவேகானந்தா இளையோா் சங்கத் தலைவா் வி.கே.யோகநாதன் ஆகியோா் பாா்வையாளா்களாகக் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி தாளாளா் ஆா்.சுவாமிநாதன் வரவேற்றாா். பேராசிரியை சி. பானுப்பிரியா நன்றி கூறினாா்.