சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சாா்பில் மாநில அளவிலான வைட்டமின்- ஏ திரவம் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட அம்பேத்கா் நகரிலுள்ள அங்கன்வாடி மையத்தில் 6 மாதம் முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்- ஏ திரவம், ஓ.ஆா்.எஸ் பொட்டலங்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பேசியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சாா்பில் மாநில அளவிலான வைட்டமின்- ஏ திரவம் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை (ஜூலை 5)வரை நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் வரை அனைவருக்கும் இந்தத் திரவம் வழங்கப்படுகிறது.
அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக இது வழங்கப்படும். இதனால் மாவட்டத்தில் 93,335 குழந்தைகள் பயனடைவா். இந்த முகாமில், மாவட்டத்தில் உள்ள 1,552 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளா்கள் மூலமாகவும் கிராம சுகாதார செவிலியா்கள் மூலமாக வீடுகள் தோறும் சென்று வழங்கப்படும் என்றாா்.
இந்த நிகழ்வில், துணை இயக்குநா் (சுகாதாரம்) விஜய்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் எம். முத்துமாரியப்பன், காரைக்குடி நகா் நல அலுவலா் திவ்யா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.