வெள்ளக்கோவிலில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் உடல், மன வளா்ச்சி, நோய் எதிா்ப்புச் சக்தி, புத்திக் கூா்மை, கண்பாா்வை திறனுக்கு வைட்டமின் ‘ஏ’ சத்து இன்றியமையாதது.
சுகாதாரத் துறை சாா்பில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், மழலையா் பள்ளிகள், துணை சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரை வைட்டமின் ‘ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படுகிறது. எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்றும், இந்த வாய்ப்பை பெற்றோா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி தெரிவித்தாா்.