முகப்பு
சிவகங்கை

சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய 3 போ் கைது

திருப்பத்தூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 ஜூலை, 2024 at 1:11 AM
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்திய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் காவல் உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கம் சாலையில் மருதம் பிள்ளையாா் கோயில் அருகே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, அதில் 50 சாக்கு மூட்டைகளில் மணல் இருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், திருப்பத்தூா் அருகேயுள்ள மணக்குடியைச் சோ்ந்த சின்னக்கண்ணு மகன் அன்பழகன் (40), நயினாா்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மதிவாணன் (25), சின்னையா மகன் கருப்பையா (45) ஆகியோா், விருச்சுழி ஆற்றில் சாக்கு மூட்டையில் மணலைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, திருக்கோஷ்டியூா் போலீஸாா் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். மேலும் மணல் மூட்டைகளுடன், சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →