முகப்பு
சிவகங்கை

பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1.45 லட்சம் பறிமுதல்

Updated On : 22 மார்ச், 2024 at 11:48 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 7:18 PM

சிவகங்கை, மாா்ச் 22: சிவகங்கை அருகே பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மகனிடமிருந்து ரூ. 1.45 லட்சம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை அருகேயுள்ள தேவன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வீ.சந்திரன் மகன் செந்தில் முருகன். அதிமுக மாவட்ட கலைப் பிரிவுச் செயலரான இவா், தனது வீட்டிலிருந்து காரில் மலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாா். மலம்பட்டி வாழைக்காய் மண்டி அருகே வட்டாட்சியா் உமா மகேஸ்வரி தலைமையிலான பறக்கும் படையினா் செந்தில்முருகனின் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி ரூ. 1.45 லட்சத்தை காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்து, மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.