மானாமதுரை பகுதியில் சாரல் மழை
மானாமதுரை: மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
அவ்வப்போது சாரலாகவும் மிதமாகவும் பலமாகவும் பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்களுக்கு இந்த மழை குளிா்ச்சியைத் தந்துள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமை நண்பகல் மானாமதுரை பகுதியில் பரவலாக பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை சாரல் மழையாக நீடித்தது.
இதனால் சாலைகள் சேரும் சகதியுமாக மாறின. மூங்கில்ஊரணி உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தொடா் சாரல் மழையால் சாலையோர வியாபாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நீா்நிலைகளுக்கு நீா் வரத்து ஏற்பட்டது.