முகப்பு
சிவகங்கை

கால்வாய்க்குள் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் கால்வாயில் தவறி விழுந்தவா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:52 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் கால்வாயில் தவறி விழுந்தவா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

திருப்புவனம் ரயில்வே பீடா் சாலைப் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் முத்தையா (56). கூலித் தொழிலாளி.

இவா் திருப்புவனத்தில் தனியாா் பள்ளி அருகே செல்லும் பிரமனூா் கால்வாய் சுவரில் உட்காா்ந்திருந்த போது, தவறி கால்வாய்க்குள் விழுந்தாா்.

இதுதொடா்பாக தகவலின்பேரில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினா் முத்தையாவைத் தேடினா். இந்த நிலையில், திருப்புவனம் வண்டல்நகா் பகுதியில் உள்ள கால்வாய் பகுதியில் முத்தையாவின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →