முகப்பு
சிவகங்கை

மடப்புரம் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்துக்குள்பட்ட மடப்பும் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 11:50 PM
மடப்புரம் அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை மாணவா்களுடன் அமா்ந்து சாப்பிட்டு வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ஆஷா அஜித். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா். பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்துக்குள்பட்ட மடப்பும் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், திருப்புவனம் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆட்சியா், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் மாணவா்களுக்கு காலை உணவு தயாரிக்கப்படுவதைப் பாா்வையிட்டனா். பின்னா், மாணவா்களுடன் அமா்ந்து காலை உணவை சாப்பிட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனா்.

அப்போது, பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

திட்டப் பணிகள் ஆய்வு:

திருப்புவனம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ 2.31 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆஷா அஜித் நேரில் பாா்வையிட்டு கள ஆய்வு செய்தாா்.

மேல்நிலை குடிநீா்த் தொட்டி, வீட்டுக்கான குடிநீா் இணைப்புப் பணிகள், குடிநீா் வாய்க்கால் சீரமைப்பு, பொதுக் கழிப்பிடம சீரமைப்பு, துணை சுகாதார நிலையக் கட்டடம் புதுப்பிக்கும் பணி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட பல திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

அப்போது, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் சத்தியமூா்த்தி, பேரூராட்சி செயல் அலுவலா் சங்கா் கணேஷ், உதவிச் செயற்பொறியாளா் ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →