FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றித் தர கோரிக்கை

திருப்பத்தூா் அருகே அப்பாகுடிப்பட்டி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 2 அக்டோபர் 2024, 11:57 pm IST
திருப்பத்தூா் அருகேயுள்ள அப்பாகுடிப்பட்டி கிராம கண்மாய் பகுதியில் தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பங்கள்.
பகிர்:

திருப்பத்தூா் அருகே அப்பாகுடிப்பட்டி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அப்பாகுடிபட்டி கிராமத்து கண்மாய் பகுதியில் உள்ள 2 மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்களை மாற்றித் தர வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் இதுவரை மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பங்களை மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாத்து வருகிறோம். ஆனால் கனமழையோ பலத்த காற்றோ அடித்தால் இந்த மின்கம்பங்கள் சாய்ந்து விழும். மேலும் இந்தப் பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தலாக உள்ள இந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என மின்வாரிய அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments