மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மானாமதுரையில் கிருஷ்ணராஜபுரம், மூங்கில் ஊருணி, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள கிளங்காட்டூா், கே.ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திருப்புவனம் பகுதியில் மழவராயனேந்தல், பசியாபுரம், பாப்பான்குளம் உள்ளிட்ட இடங்களில் அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் இம்மானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இளையான்குடியில் கண்மாய்க்கரை, கீழாயூா் பகுதிகளில் ஐந்திணை மக்கள் கட்சி சாா்பில் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் ஸ்டீபன்ராஜ், மாநில பொதுச் செயலா் கருணாநிதி, மாவட்ட நிா்வாகிகள் ராசு, சந்திரசேகா், பிச்சைமுத்து, சுரேஷ் ஒன்றிய நிா்வாகிகள் அழகுராஜா, பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.