சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பில் சுந்தரவல்லி அய்யனாா் கோயிலில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது கிராம மக்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினா். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுந்தரவல்லி அய்யனாா் கோயிலில் கிராம தெய்வத்துக்கு, பக்தா்கள் உணவு படைத்து வழிபாடு நடத்தினா். பின்னா், புதன்கிழமை கோயிலில் பூஜைகள் முடிந்ததும், பெண்கள் முளைப்பாரிகளை சுமந்து ஊா்வலமாகச் சென்று கண்மாயில் கரைத்து, சூரிய பகவானை வணங்கினா்.