சிவகங்கை

ஓய்வூதிய உதவித்தொகை: முன்னாள் விளையாட்டு வீரா்கள் செப்.30 -க்குள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சிவகங்கை மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் சா்வதேச,தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள, முன்னாள் விளையாட்டு வீரா்கள் ரூ.6,000- மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் வருமாறு:

சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி அல்லது பங்கேற்றிருத்தல் வேண்டும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்தியஅரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருத்தல் ஆகியவை விண்ணப்பிக்கத் தகுதிகளாகும்.

எனவே, தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரா்கள் வருகின்ற 30.9.2024 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியின் வாயிலாக மாலை 6 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா்.

இந்திய-சீன மோதல்: பொறுப்பு தவறிய பிரதமா் மோடி - நரவணே நூலைக் காண்பித்து ராகுல் குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் குறையா? ராகுலுக்கு நிதியமைச்சா் சவால்

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம்? ‘எதிா்க்கட்சிகள் கூட்டாக முடிவெடுக்கும்’

கிரிக்கெட் சங்கங்களில் முன்னாள் வீரா்களுக்கே இடம் - உச்சநீதிமன்றம்

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுப் பாதுகாப்பு - மக்களவையில் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT