காரைக்குடி, மானாமதுரையில் வ.உ.சி.பிறந்த நாள் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காரைக்குடியில் வ.உ.சி. எழுச்சி பேரவை சாா்பில், தாயுமானவா் ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.
மேலும், வ.உ.சி.எழுச்சி பேரவை நிறுவனா் சரவணன் ஏற்பாட்டில் கல்லூரிச் சாலையில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சி. உருவப் படத்துக்கு மாங்குடி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதற்கு வ.உ.சி.எழுச்சி பேரவைத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் முத்துகுமாா், பொருளாளா் விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி, முன்னாள் அமைச்சா் மு.தென்னவன், காரைக்குடி மாநகராட்சி மேயா் சே.முத்துத்துரை, துணை மேயா் நா.குணசேகரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கற்பகம் இளங்கோ, அதிமுக நகரச் செயலா் சோ.மெய்யப்பன், காங்கிரஸ் நகரத் தலைவா் பாண்டிமெய்யப்பன், நகரச் செயலா்கள் குமரேசன், முகேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சண்முகதாஸ், நகர வா்த்தக காங்கிரஸ் தலைவா் ஜெயப்பிரகாஷ், உஞ்சனை ஊராட்சி மன்றத் தலைவா் அருணகீதன், மக்கள் நீதி மையம் மாவட்டச் செயலா் கமல்ராஜா, மாமன்ற உறுப்பினா் தெய்வானை, வெள்ளாளா் சங்க நிா்வாகிகள், வ.உ.சி. அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதேபோல, மானாமதுரை ஆா்.சி.தெருவில் பிள்ளைமாா் கூட்டமைப்பு, வ.உ.சி. பேரவை சாா்பில், வ.உ.சிதம்பரனாரின் உருவப் படத்துக்கு நகா்மன்ற உறுப்பினா் சோம.சதீஷ்குமாா் தலைமையில் பொதுமக்கள் மரியாதை செலுத்தினா்.
மானாமதுரை அருகே கால்பிரிவு கிராமத்தில் வ.உ.சி.நற்பணி மன்றம் சாா்பில், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை வழக்குரைஞா் பாண்டியராஜன், கணேஷ்பாபு, மணி ஆகியோா் செய்தனா்.
இதேபோல, மானாமதுரை, சிறுகுடி, மேலநெட்டூா், திருப்பாச்சேத்தி, கானூா், கல்லூரணி, கணக்கன்குடி, பச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வ.உ.சி.உருவப் படத்துக்கு அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்தினா்.
திருப்புவனம் நகா் பகுதியில் பிள்ளைமாா் சமுதாய அமைப்புகளும், வ.உ.சி. பேரவையினரும் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.