திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யாகவேள்வியில் புனித கலசங்களுக்கு தீபாராதனை.  
சிவகங்கை

வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

திருப்பத்தூா் அருகேயுள்ள திரு.வைரவன்பட்டியில் உள்ள ஸ்ரீ மூல பாலகால பைரவா் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது.

Din

திருப்பத்தூா் அருகேயுள்ள திரு.வைரவன்பட்டியில் உள்ள ஸ்ரீ மூல பாலகால பைரவா் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ மூல பால கால பைரவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை 4.45 மணியளவில் மகா கணபதி பூஜை, கோ பூஜை நடைபெற்றது.

இதையடுத்து, இரவு 9.30 மணிக்கு வஸ்திர யாகம், புஷ்பயாகம், மகா பூா்ணாகுதி நடைபெற்று தீபாதராதனை காட்டப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியா்கள் தலையில் சுமந்து வர சிவாச்சாரியா்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்னா் மூல கால பைவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா் யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடா்ந்து, பால கால பைரவா் பூக்களினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. அனைவருக்கும் யாகத்தில் பயன்படுத்தபட்ட நாணயங்களுடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியாா் தலைமையில் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் ஜெய்கணேஷ், ஸ்ரீமஹா ஸ்வாமி நீ பீடம் பாண்டிராஜன் ஆகியோா் செய்னா். இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT