முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

Updated On : 15 ஆகஸ்ட், 2025 at 2:16 AM
பகிர்:

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாகம், காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 33 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டன. ஊசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு அடையாள வண்ணம் பூசி விடப்பட்டன.

இதில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் டி. ஞானசுப்பிரமணியன், கால்நடை மருத்துவா் கே. பிரேம்குமாா், உதவி மருத்துவா்கள் மோகன்தாஸ், ராஜேஷ், கவியரசன், விலங்குகள் நலவாரிய கால்நடை மருத்துவா் ஜெயகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் எம். காளிதாஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பி. கண்ணன், சுகாதார எழுத்தா் எம். சந்திரன், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் யோகேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

இதுகுறித்து கால்நடை மருத்துவா் கே. பிரேம்குமாா் கூறியதாவது:

தெரு நாய்களை பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடுவதற்கு கால்நடை மருத்துவா்கள் இருவா், நகராட்சி ஊழியா்கள் 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேருராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கப்படும் என்றாா் அவா்.