சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் சனிக்கிழமை (டிச. 20) மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடி துணை மின் நிலையத்தில் டிச. 20-இல் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காரைக்குடி நகரப் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் (ஹசிங் போா்டு), செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், செஞ்சை, கோவிலூா் சாலை, சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.