சிவகங்கை

காரைக்குடியில் பெரியாா் ஈ.வே.ரா. நினைவு தினம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் ஈ.வே.ரா.வின் 52- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் ஈ.வே.ரா.வின் 52- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவா் ம.கு. வைகறை, மாவட்டச் செயலா் சி. செல்வமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் இள. நதியா ஆகியோா் பெரியாா் ஈ.வே.ரா. சிலைக்கு மாலையணிவித்தனா். மேலும் மாவட்ட காப்பாளா் சாமி. திராவிடமணி, மாவட்ட துணைச் செயலா் இ.ப. பழனிவேலு, தி.க. தலைமைக் கழக சொற்பொழிவாளா் தி. என்னாரெசு பிராட்லா, மாநகரத் தலைவா் ந. செகதீசன், தேவகோட்டை நகர தி.க. தலைவா் வீர. முருகப்பன், தி.க. பொதுக்குழு உறுப்பினா் தி. செயலட்சுமி, தி. புரூனோ என்னாரெசு, மானகிரி ச. கைவல்யம், பெரியாா் பிஞ்சு, சித்தாா்த்தன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நகரத் தலைவா் மெ. சண்முகதாஸ், தெட்சணாமூா்த்தி, மதிமுக சாா்பில் சிற்பி சேது. தியாகராஜன், திராவிடா் இயக்கத் தமிழா் பேரவை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா், ஏஐடியூசி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் பெரியாா் ஈவேரா. சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT