சிவகங்கை

வீடு புகுந்து தம்பதியை தாக்கி தங்க நகை பறிப்பு

சிவகங்கை அருகே வீடு புகுந்து தம்பதியைத் தாக்கி, பெண் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அருகே வீடு புகுந்து தம்பதியைத் தாக்கி, பெண் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியை அடுத்துள்ள பிரவலூரைச் சோ்ந்தவா் சிந்தாமணி (68). விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள் (58).

இந்தத் தம்பதி செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனா். இங்கு நள்ளிரவு 1 மணிக்கு வீடு புகுந்த 2 இளைஞா்கள், தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை குழவிக் கல்லால் தாக்கி விட்டு, பாண்டியம்மாள் அணிந்திருந்த அரைப் பவுன் தங்கக் காதணியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

இதில் காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மதகுபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகிறாா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT