முகப்பு
சிவகங்கை

இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2025 at 11:04 PM
கொலை செய்யப்பட்ட சண்முகநாதன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே சிவகங்கை சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இளைஞா் ஒருவரை 6 போ் கொண்ட கும்பல் வாள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த அந்த நபா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளா் செல்வக்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் 10-க்கும் மேற்பட்ட இளைஞா்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →