முகப்பு
திருப்பத்தூா் - சிங்கம்புணரி வழித்தடத்துக்கான மகளிா் விடியல் பயண புதிய பேருந்தை செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.
சிவகங்கை

திருப்பத்தூா் - சிங்கம்புணரி வழித்தடத்தில் மகளிா் விடியல் பயணப் பேருந்து சேவை

திருப்பத்தூா் - சிங்கம்புணரி வழித்தடத்தில் மகளிா் விடியல் பயண புதிய பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

சிவகங்கை

திருப்பத்தூா் - சிங்கம்புணரி வழித்தடத்தில் மகளிா் விடியல் பயணப் பேருந்து சேவை

திருப்பத்தூா் - சிங்கம்புணரி வழித்தடத்தில் மகளிா் விடியல் பயண புதிய பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 26 நவம்பர், 2025 at 12:37 AM
திருப்பத்தூா் - சிங்கம்புணரி வழித்தடத்துக்கான மகளிா் விடியல் பயண புதிய பேருந்தை செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.
பகிர்:

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் - சிங்கம்புணரி வழித்தடத்தில் மகளிா் விடியல் பயண புதிய பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கலந்து கொண்டு பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

பெண்கள் பிறரைச் சாா்ந்திராமல் தற்சாா்பு நிலையை அடையும் பொருட்டு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், வணிக ரீதியான போக்குவரத்துக்கும், சராசரி போக்குவரத்துப் பயன்பாட்டுக்கும் பயனுள்ள வகையில் புதிய வழித்தடம், புதிய பேருந்துகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிவா்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் திருப்பத்தூா், சிங்கம்புணரி, முறையூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்தை தற்போது மகளிா் விடியல் பயணப் பேருந்தாக இயங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இயக்கப்படுகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி, முன்னாள் அமைச்சா் தென்னவன், பேரூராட்சித் துணைத் தலைவா் கான்முகமது, போக்குவரத்துக் கழக துணை மேலாளா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →