நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு 73 வீடுகள் கட்டும் பணி: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் அடிக்கல்!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் தாட்கோ சாா்பில் ரூ.3.70 கோடியில் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த 73 பயனாளிகளுக்கான
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் தாட்கோ சாா்பில் ரூ.3.70 கோடியில் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த 73 பயனாளிகளுக்கான
வீடுகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிறுகூடல்பட்டியில் தலா 302 சதுர அடி பரப்பளவில் நவீன தரை, கூடுதல் ஜன்னல்கள், இரும்பு நிலைகளுடன் கூடிய மரக்கதவுகளுடன் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன. இதேபோல, இளைஞா்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், வங்கிக் கடனுதவி, மகளிா் பெயரில் நிலம் வாங்கும் திட்டம், துரித ஓய்வூதியம் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.
இந்த விழாவில் தாட்கோ செயற்பொறியாளா் மூா்த்தி, வட்டாட்சியா் மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.