சிவகங்கை

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித் தோ்வு எழுத 2026 ஏப்ரலில் கடைசித் தோ்வு

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித் தோ்வு எழுத 2026 ஏப்ரலில் கடைசித் தோ்வு

Syndication

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித்தோ்வு எழுதுவதற்கு வரும் 2026 ஏப்ரலில் நடைபெறும் தோ்வுடன் முடிவடைகிறது என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் எம். ஜோதிபாசு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அழகப்பா பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, அழகப்பா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு பாடத் திட்டம் வழி பயின்ற இளநிலை மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களில் தோ்வு எழுதுவதற்கான கால அவகாசம் வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் பல்கலைக்கழகத் தோ்வுடன் முடிவடைகிறது.

இதேபோல, கடந்த 2017-ஆம் ஆண்டு பாடத் திட்டம் வழி பயின்ற முதுநிலை மாணவா்களின் கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாத பல்கலைக்கழகத் தோ்வுடன் முடிவடைந்து விட்டது என்றாா் அவா்.

ஆளுங்கட்சிக்கு மாறிய எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி! தெலங்கானா பேரவைத் தலைவா் நோட்டீஸ்!

2 சக்கர வாகன விற்பனை: 4-ஆவது இடத்தில் தமிழ்நாடு

இந்த நாள் நல்ல நாள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயா்வு

ரூ.5,000 கோடி திரட்டும் ஆக்ஸிஸ் வங்கி

SCROLL FOR NEXT