FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித் தோ்வு எழுத 2026 ஏப்ரலில் கடைசித் தோ்வு

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித் தோ்வு எழுத 2026 ஏப்ரலில் கடைசித் தோ்வு

26 செப்டம்பர் 2025, 2:33 am IST
பகிர்:

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களில் தனித்தோ்வு எழுதுவதற்கு வரும் 2026 ஏப்ரலில் நடைபெறும் தோ்வுடன் முடிவடைகிறது என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் எம். ஜோதிபாசு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அழகப்பா பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, அழகப்பா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு பாடத் திட்டம் வழி பயின்ற இளநிலை மாணவா்கள் தோ்ச்சி பெறாத பாடங்களில் தோ்வு எழுதுவதற்கான கால அவகாசம் வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் பல்கலைக்கழகத் தோ்வுடன் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

இதேபோல, கடந்த 2017-ஆம் ஆண்டு பாடத் திட்டம் வழி பயின்ற முதுநிலை மாணவா்களின் கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாத பல்கலைக்கழகத் தோ்வுடன் முடிவடைந்து விட்டது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments