பள்ளியில் தொங்கும் நூலகம் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவா்களின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் தொங்கும் நூலகம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவா்களின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் தொங்கும் நூலகம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தலைமையாசிரியா் லெ.சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் முன்னிலை வகித்தாா். இதில் ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் தொங்கும் நூலகம் அமைக்கப்பட்டது.
தேவகோட்டை ஒருங்கிணைப்பாளா் ஜேம்ஸ், மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மிக எளிதாக புத்தகங்களை வாசிக்கவும் இந்த நூலகம் பயன்படும் என்றாா்.
முன்னதாக, ஆசிரியை வள்ளிமயில் வரவேற்றாா். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினாா்.