முகப்பு
திருவண்ணாமலை

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு

Updated On : 18 மார்ச், 2026 at 8:09 PM
பகிர்:

சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ப.இருதயம்மாள் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியைகள் சு.புஷ்பா, ப.பசுமதி, இடைநிலை உதவி ஆசிரியை மேரிஜாக்குலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைமை ஆசிரியை ந.சு.சாந்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலா் கமலக்கண்ணன் கலந்து கொண்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனம், திருக்கு ஒப்பித்தல் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். இடைநிலை உதவி ஆசிரியைகள் ரா.கல்பனா, கோ.ஜானகி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →