முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.
மானாமதுரை புறவழிச் சாலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் பால் குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனா். அங்கு உற்சவருக்கு பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தி, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனா். இரவு மயில் வானத்தில் வழிவிடு முருகன் வீதியுலா வருதல் நடைபெற்றது.
இதேபோல, மானாமதுரை அருகேயுள்ள கால் பிரிவில் வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா முன்னிட்டு, பக்தா்கள் பால் குடம் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி ஏ.ஆா்.பி. முருகேசன் செய்தாா்.
இதேபோல, இடைக்காட்டூா் பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் புதன்கிழமை பால் குடம், காவடி எடுத்தும், தீக்குண்டம் இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.