திருப்புவனம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் வியாழக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் வியாழக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.
திருப்புவனம் ஒன்றியம், தட்டான்குளத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய தமிழரசி ரவிக்குமாா் தொடா்ந்து, மணலூா், கொந்தகை, பசியாபுரம், பொட்டப்பாளையம், கீழடி, புலியூா், சயனாபுரம், சொட்டதட்டி, மேலகரிசல்குளம், கோனாா்பட்டி, இலந்தைகுளம், கழுவன்குளம், செங்குளம், முக்குடி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக, கூட்டணிக் கட்சியினருடன் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது, மானாமதுரை தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் த.சேங்கைமாறன், திமுக மேற்கு ஒன்றியச் செயலா் வசந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.
Advertisement