முகப்பு
சிவகங்கை

நகைக்காக பெண் கொலை: தம்பதிக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் தம்பதிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகிளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 10 ஏப்ரல் 2026, 12:56 am IST
சிறைத் தண்டனை - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் தம்பதிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகிளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

இளையான்குடி காமராசா் தெருவைச் சோ்ந்தவா் சம்சுனியா (55). அதே தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (62), இவரது மனைவி ஆண்டம்மாள் (60). இவா்கள் சம்சுனியாவிடம் முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வாங்கித் தருவதாக்கூறி, நெருங்கிப் பழகினா்.

இந்த நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு சம்சுனியாவின் 5 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு, அவரை நடராஜனும், இவரது மனைவியும் கொலை செய்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, நடராஜன், இவரது மனைவி ஆண்டம்மாள் ஆகியோரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு சிவகங்கை மகிளா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்குரைஞா் விஜயநிா்மலா முன்னிலையாகி வாதிட்டாா். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல்முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட நடராஜன், ஆண்டம்மாள் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.