கைது 
சிவகங்கை

இளைஞா் கொலை: ஒருவா் கைது

தினமணி செய்திச் சேவை

காரைக்குடி அருகே இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (26). போதைப் பொருள்களுக்கு அடிமையான இவா், வேலையின்றி சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டியைச் சோ்ந்த பாண்டியின் (55) வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று கஞ்சா தருமாறு கேட்டாராம். அதற்கு, பாண்டி கஞ்சா இல்லை எனக் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், பாண்டி அருகே இருந்த கத்தியால் நந்தகுமாரை உடலின் பல இடங்களிலும் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த குன்றக்குடி காவல் நிலைய போலீஸாா் நந்தகுமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, பாண்டி மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் தடுப்பு மன்றங்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

மகாராஷ்டிரம்: 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் 8.48 கோடி விவசாயிகளுக்கு எண்ம அடையாள அட்டை: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

SCROLL FOR NEXT