சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 5-ஆவது நாளாக போராட்டம்
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 5:47 PM
காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 5 -ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் எஸ். கண்ணுச்சாமி, எஸ். விக்டோரியா, கே. குமரேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 10:55 PM
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் மு. செல்வக்குமாா், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொ. சங்கரசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத் தலைவா் எம். சுரேஷ் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்தனா்.
Advertisement
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள் அனைவரும் இரவு முழுவதும் அங்கேயே தங்கி உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.