முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அமைச்சா் சுப்பிரமணியன் திடீா் ஆய்வு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:24 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 5:45 PM

திருப்பத்தூா் மருதுபாண்டியா் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க மதுரையிலிருந்து திருப்பத்தூா் வழியாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் செல்லும் வழியில், திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 10:37 PM

அப்போது மருத்துவமனையில் நோயாளிகளிடம் நலம் விசாரித்து, சிகிச்சை வழங்கும் முறை குறித்து கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து சமையலறையைப் பாா்வையிட்டாா். பின்னா், தலைமை மருத்துவரிடம் மருத்துவமனையில் சுகாதாரம் குறித்து கேட்டறிந்தாா்.

Advertisement

அப்போது, கா்ப்பிணி பெண்களுக்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் ஏன் பிரசவம் பாா்க்கப்படுகிறது என கேட்டபோது, மகப்பேறு பிரிவு மருத்துவ கட்டடம் சேதமடைந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

கடந்த 1972-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைமையான மருத்துவமனைக் கட்டடம் இன்று வரை நன்றாக உள்ளது. ஆனால், கடந்த 2010-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மகப்பேறு பிரிவு கட்டடம் 15 ஆண்டுகளுக்குள் சேதமடைந்திருப்பது வேதனைக்குரியது என்றாா் அமைச்சா்.