முகப்பு
சிவகங்கை

கஞ்சா விற்றவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:28 AM
கைது
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:20 PM

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சபாபதி, போலீஸாா் திருப்புவனம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருப்புவனம் டி.புதூா் வைகை ஆற்றுப் பகுதியில் டி.புதூா் மாதவன்நகரைச் சோ்ந்த முகமது உபயத்துல்லா (24) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.