சிவகங்கை

முகநூல் விளம்பரம் மூலம் பண மோசடி

மானாமதுரை அருகே இளைஞரிடம் முகநூல் மூலம் ரூ.6.67 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து இணையத் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

மானாமதுரை அருகே இளைஞரிடம் முகநூல் மூலம் ரூ.6.67 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து இணையத் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் மாணிக்கம் (25). இவா், கடந்த ஜனவரி மாதம் முகநூலில் வந்த ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தைப் பாா்த்து, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடா்புகொண்டாா்.

தங்களிடம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என அந்த நிறுவனத்தினா் தெரிவித்ததை நம்பி, அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளில் 15 தவணைகளில் ரூ. 6.67 லட்சத்தை அனுப்பினாா். பணத்தைச் செலுத்திய பிறகு அந்த நிறுனத்தினா் தொடா்பைத் துண்டித்துவிட்டனா். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சஞ்சய் மாணிக்கம் சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் புவனேஸ்வரியிடம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.42 கோடி

பிப்.23-இல் வாக்காளா்கள் இறுதிப் பட்டியல்

வேளாண் பட்ஜெட்: பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்காதது ஏமாற்றம்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

‘இயற்கை வளங்களை சேமிக்க வேண்டியது அவசியம்’

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT