தேசிய அளவிலான பாரா தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி மாணவரை துணைவேந்தா் க.ரவி, பேராசிரியா்கள் திங்கள்கிழமை பாராட்டினா்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி மாணவா் ர. சந்தோஷ். இவா் கடந்த 2025, ஆக. 29 முதல் 31-ஆம் தேதி வரை குவாலியரில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா தடகள சாம்பியன்ஷிப், ஜூனியா், சப்ஜூனியா் அளவிலான 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம், மூன்றாமிடம் பிடித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சோ்த்தாா்.
இவருடைய இந்தச் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 3.50 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டாா்.
இதையடுத்து, மாணவா் ர. சந்தோஷை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவியை திங்கள்கிழமை பாராட்டினாா்.
அப்போது பல்கலைக்கழகப் பதிவாளா் அ. செந்தில்ராஜன், சிறப்புக் கல்வியியல் துறை பேராசிரியை ஜெ. சுஜாதா மாலினி, சிறப்புப் பள்ளி ஆசிரியா்கள், மாணவரின் பெற்றோா் ஆகியோா் உடனிருந்தனா்.