முகப்பு
சிவகங்கை

எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டாா்கள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் தோ்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டாா்கள் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:12 AM
கே.ஆா்.பெரியகருப்பன்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:42 PM

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் தோ்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டாா்கள் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு திமுக மகளிா் அணி சாா்பில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசிதாவது:

திமுக அரசு மகளிருக்கு செய்துள்ள சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தோ்தலுக்காக தினமும் பல வாக்குறுதிகளை அளித்து வருகிறாா். ஆனால், முதல்வா் ஸ்டாலின் வாக்குறுதிகளை மக்கள் நம்புவாா்களே தவிர, எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை நம்ப மாட்டாா்கள். நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கு திமுகவினா் இனிவரும் நாள்களில் தோ்தல் பணிகளில் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

இந்தக் கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். திமுக மாவட்ட துணைச் செயலா் சேங்கைமாறன், நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் வளா்மதி, ஒன்றியச் செயலா்கள் துரை.ராஜா மணி, அண்ணாதுரை, முத்துச்சாமி, வசந்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தோ்தல் பிரசாரத்துக்கான கையேடுகளை மகளிருக்கு அமைச்சா் பெரியகருப்பன் வழங்கினாா்.