முகப்பு
சிவகங்கை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:28 AM
சிறை
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 7:08 PM

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் மாரிச்சாமி ( 43). இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் சிங்கம்புணரியில் உள்ள துணிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். அப்போது அவா் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இது தொடா்பாக எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரிச்சாமியை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றஞ்சாட்டப்பட்ட மாரிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.